காஞ்சனி மல்கானி கொழும்பைச்
சேர்ந்த ஒரு நிகழ்த்துக்கலைஞரும் நடனக் கலைஞருமாவார். இலங்கையின் பாரம்பரிய நடனத்தில்
செவ்வியல் பயிற்சி பெற்ற இவர் பின்னர் ஜப்பானிய நாட்டின் அரங்காட்டமான புடோ பற்றி அறிந்துகொண்டதைத்
தொடர்ந்து நடப்பு நாட்டியப் பாங்குகள் பற்றியும் கற்பனைத் திறன்கொண்டு உருவாக்கும்
பாங்குகள் பற்றியும் ஆராய முயல்வதற்கு மாறியுள்ளார். தற்போது இவர் தனக்கென ஒரு நடன
அசைவுப் பாணியினைஉருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்;.
எமது கதைகளுக்காக>
தன்னைச் சுற்றியுள்ள உலகம் மெதுவாகச் சரிந்து விழுகையில் பல்வேறு வகிபாத்திரங்களை
[மகள், சகோதரி, துணைவி, பராமரிப்பாளர் மற்றும் மீட்பர்] நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யும்
ஒரு பெண்ணின் நிலையற்ற அதிர்ஷ்டங்களையும் இடையறாத் துயரங்களையும் காஞ்சான தனது இணையற்ற
பாணியில் நிகழ்த்தியுள்ளார். தனது வாழ்வில் இந்த வகிபாத்திரங்களை எல்லாம் வகிக்கையில்
அவருக்குக் கிடைத்த அன்பு, பராமரிப்பு அனைத்தையும் தாண்டித் தனது தனிமையில் இருந்து
கதை நாயகியான இப்பெண்ணால் தப்ப முடியவில்லை. இத்தனிமை காலப்போக்கில் கூர்மையானதாக மாறத்
தொடங்கிவிட்டது. தற்போது முதியோருக்கான பராமரிப்பு இல்லத்தில் வதியும் இவரின் துணைகள்
தனிமையும் காலமுமே.