நாவலப்பிட்டியைச் சேர்ந்த சாஜித் வஹாப் எழுத்தாளரும்
குறும்படத் தயாரிப்பாளருமாவார். இவர் சிறு வயது முதலே கதைகளை வாசிப்பதிலும்
எழுதுவதிலும் அதீத ஆர்வத்தினைக் கொண்டிருந்தார்.
தனது கதைசொல்லும் ஆற்றலை வெளிக்காட்டுவதற்கு எமது கதைகள் வழங்கிய வாய்ப்பினை
வஹாப் பயன்படுத்தியிருக்கின்றார். மக்கள் வாழ்ந்த வலிமிக்க வாழ்க்கைக் கதைகளைத்
தனது கலையாற்றல் மூலம் தனது கதையில் வெளிக்கொணர்ந்து பச்சாதாபத்தினை உருவாக்குவதே
இவரின் குறிக்கோளாகும். இதன் மூலம் சமாதானமும் சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தினை
உருவாக்குவதே இவரின் இறுதி இலக்காகும்.