வவுனியாவைச் சேர்ந்த சிவராசா பிரதீப் தொழில்ரீதியான நாடகக் கலைஞராவார். இவர் அரங்காலயா சுதந்திர நாடக வலையமைப்பின் பணிப்பாளராவார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் நாடகம் மற்றும் அரங்கியலைத் தனது விசேட கற்கையாகக் கற்றுள்ளார். கலையின் மூலம் மாற்றத்தினை உருவாக்குவதற்கு பிரதீப்ராசா அயராதுழைக்கின்றார். இற்றைவரை 90 நாடகங்களில் பணியாற்றியுள்ள பிரதீப்ராசா 19 குறுநாடகங்களையும் ஐந்து முழு நீள நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப்ராசா பல விருதுகளையும் தனது படைப்புக்களுக்காகப் பெற்றுள்ளார்.
வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைக் கதையினை எமது கதைகள் கருத்திட்டத்துக்காக பிரதீப்ராசா தெரிவுசெய்துள்ளார். வன்முறைக்கான மாற்றீட்டினை மற்றவர்களும் தேடுவதை ஊக்குவிப்பதற்காக இந்தக் கதை எதிர்காலத் தலைமுறைக்கும் கடத்தப்படவேண்டும் என சிவராசா நம்புகின்றார். வன்முறையின் தாக்கத்தினையும் எதிர்காலப் பரம்பரையின் மீதான அதன் நீண்ட கால விளைவுகளைம் பிரதீப்ராசா டிஜிட்டல் ஊடகத்தின் மூலம் வெளிக்கொணர்கின்றார். இளந்தலைமுறையினர் சிறந்த வாழ்க்கையினையும் சமாதானமான வாழ்க்கையினையும் வாழ்வதற்குத் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த மூத்த தலைமுறையினருக்கும் இவர் மரியாதை கலந்த நன்றியினை வெளிப்படுத்துகின்றார்.
Video of Burn and Born